கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், அங்கிருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணையக் கைதியாக பிடித்து சென்றதாக இஸ்ரேல் அரசு கூறி உள்ளது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் காசா மீது வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் காசாவில் உள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனையில் தான் ஹமாஸ் அமைப்பினர் சுரங்கப்பாதை அமைந்துள்ளதாக இஸ்ரேல் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஆயுதம் ஏந்திய சிலர் இஸ்ரேல் பணயக்கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் இழுத்து வருவதும், ஒருவரை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வருவதும் போல பதிவாகி உள்ள சிசிடிவி காட்சி X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.., ஜனவரி 1 முதல் இது கட்டாயம்.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!