நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வருகை பதிவேடு கட்டாயமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி. தற்போது இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது புதுச்சேரி நிர்வாகத்தில் மொத்தம் 54 அரசுத்துறைகளில் துறைகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இனி ஜனவரி 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தப்பட இருப்பதாக தலைமைச் செயலாளர் ராஜீவர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும் சில அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!!