இத்தாலியில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் எங்கும் வெளியே செல்ல முடியாததால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் மக்கள் தமிழ் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலை பாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உயிர்க்கொல்லி நோயான கொரோனா ..!
உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கான்டே சில நகரங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தாலியில் தமிழ் பாட்டு..!
கொரோனா வைரசால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் மன அழுத்தத்தை போக்குவதற்காக அடுக்குமாடி குடிருப்புகளில் குடி இருக்கும் மக்கள் பால்கனி பகுதிகளில் இருந்தபடி பாட்டுபாடி கொண்டு மகிழ்ந்து வருகின்றனர். தமிழ் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலை பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது.
சமூகவலைதளங்களில் சிலர் இது போலியான வீடியோ என்றும் சிலர் இந்த வீடியோ தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டதால் இது உண்மையான வீடியோ என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |