அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்தது.
ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்த நிலையில், அல் அசாத் பகுதியில் இருந்த படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் இடையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சுலைமானி மரணத்திற்கான பழிக்கு பழி வாங்கும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.