ஐபிஎல் மினி ஏலம் – தேதியை அறிவித்த பிசிசிஐ!!

0

தற்போது நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்காக மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. மேலும் மினி ஏலத்தை சென்னையில் வைத்து நடத்துவதற்கான தேதியை தற்போது அறிவித்துள்ளது.

ஐபிஎல்:

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்தது. காரணம் அடுத்த மாதம் முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவே இந்த ஆண்டு மினி ஏலம் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும் கடந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபில் வைத்து சிறப்பாக நடத்தியது பிசிசிஐ. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டு இந்தியாவில் வைத்து நடத்த போவதாக கங்குலி அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகை நட்சத்திரா – வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் சிறப்பாக நடைபெற்றால் ஐபிஎல் தொடரும் இந்தியாவில் வைத்து நடைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களுக்கு தேவை இல்லாத வீரர்களை கடந்த 20ம் தேதி அன்று விடுவித்தனர். தற்போது 8 அணிகளும் மினி ஏலத்திற்காக காத்துகொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பிசிசிஐ ஓர் தகவலை தெரிவித்துள்ளது. இந்த முறை மினி ஏலத்தை சென்னையில் வைத்து நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையே முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. எனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது. வரும் 18ம் தேதி அன்று மினி ஏலம் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here