IPL தொடரின் 15 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 56 பந்துகளில் (81 ரன்கள்) அரைசதம் அடித்து மிரட்டினார்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய RCB அணி 19.4 ஓவர் முடிவில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அதிகபட்சமாக மஹிபால் லோமரோர் 33 ரன்களுக்கும், ரஜத் படிதார் 29 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.