இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடக்க போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த RCB அணி 20 ஓவரில் 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமா அனுஜ் ராவத் 48 ரன்கள் குவித்தார். சென்னை சார்பில் முஸ்தாபிஸூர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மக்களவை தேர்தல் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவிலான சம்பள உயர்வு இருக்கும்? வெளியான தகவல்!!!
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த சிவம் துபே சிறப்பாக விளையாடி 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 34 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் CSK அணி 18.4 ஓவரில் 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.