இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 37 ரன்களுக்கும், திலக் வர்மா 21 ரன்களுக்கும் விளாசினர். இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.