இன்றைய IPL 2023 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு IPL சீஸனின் 66 ஆவது போட்டி இன்று HPCA மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து, முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் (2), ஷிகர் தவான் (17), அதர்வா டைட் (19), லியாம் லிவிங்ஸ்டன் (9), சாம் கரன் (49), ஜிதேஷ் ஷர்மா (44), ஷாருக்கான் (41) ஆகியோரது பங்களிப்பு மூலம் அந்த அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்களை எடுத்தது. இப்போது 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி கொஞ்சம் நிதானமாக விளையாடியது.
மனதை உருவ வைக்கும் வடிவேலுவின் ‘ராசாக்கண்ணு’….,பாடல் ரிலீஸ்….,
அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யசஸ்வி ஜெய்ஷ்வால் (50), ஜோஸ் பட்லர் (0), தேவ்தத் படிக்கல் (51), சஞ்சு சாம்சன் (2), ஹெட்மயர் (46), ரியான் பராக் (20), துருவ் (10), போல்ட் (1) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அதன்படி, ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 189 ரன்கள் எடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.