இந்த ஆண்டு IPL தொடக்க விழாவில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகைகள் பங்கேற்பு
இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் IPL 2023 போட்டிகள் இம்மாதம் 31 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. மார்ச் மாதம் துவங்கும் இந்த கிரிக்கெட் போட்டிகள் மே மாத இறுதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அனைத்து அணிகளும் தங்களது சொந்த மண்ணில் விளையாட உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்காக IPL இல் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வீரர்கள் கடந்த சில வாரங்களாக பயிற்சி செய்து வருகின்றனர்.
லைகா நிறுவனத்தின் அடுத்த அப்டேட்…., நாளை காலை வெளியீடு…..,
இப்போது, மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு IPL 2023 துவக்க விழாவில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.