பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நாளை (மார்ச் 24) காலை 10 மணியளவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக ட்வீட் செய்துள்ளது.
லைகா நிறுவனம்
சுபாஷ்கரன் என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா. இந்த நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், லைகா தயாரித்த கத்தி, வட சென்னை, செக்க சிவந்த வானம், தர்பார், ராங்கி, டான் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் ‘குஷி’….,கொண்டாட்டத்தில் சமந்தா ரசிகர்கள்…,
இந்நிறுவனம் தற்போது பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், மற்றுமொரு திரைப்படம் ஒன்றை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை நாளை (மார்ச் 24) காலை 10 மணியளவில் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நிறுவனம், இது ஒரு முக்கோணக் காதல் திரைப்படம் என ஹிண்ட் கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
Set your alarms ⏰ to 10:00 AM tomorrow!
Releasing the FIRST LOOK of our next movie ?️#LycaProductions pic.twitter.com/5KmVR3Dvww— Lyca Productions (@LycaProductions) March 23, 2023