பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா பாக்கியாவை பல விஷயங்களில் மட்டம் தட்ட நினைத்தும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை நிரூபித்து கொண்டே தான் இருக்கிறார். மேலும் கோபிக்கே தேவையில்லாமல் ராதிகாவை திருமணம் செய்து விட்டோமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்து விட்டது.
அதனை ஓபனாக சொல்லி விட்டார். இது போக இப்பொழுது இனியா, சரனுடன் சேர்ந்து இருப்பதை ராதிகா பார்த்து விட ஷாக்காகிறார். இனியாவை அழைத்து கண்டிக்கவும் செய்கிறார். ஆனால் இனியா அவரை கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. மேலும் சரணை பாக்கியா வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, ராதிகா இனியாவை நோட் செய்து கொண்டே இருப்பாராம். சரனுடன் பழகுவது, அவருடனேயே வெளியே செல்வது என்று இருக்க இதனால் கடைசியில் ஆத்திரமடையும் ராதிகா இனியாவை உங்க வீட்டுக்கே போ என்று விரட்டி விடுவாராம். இதனால் கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையே கூட பிரச்சனை நடக்குமாம்.