ஐபிஎல் தொடரின் 1000 வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின், வரலாற்று சிறப்புமிக்க 1000வது போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்களில் ஜோஸ் பட்லர் 18, சஞ்சு சாம்சன் 14, தேவ்தட் படிக்கல் 2, ஜேசன் ஹோல்டர் 11, ஷிம்ரோன் ஹெட்மியர் 8, துருவ் ஜூரல் 2 என சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்தில் 16 பவுண்டரி 8 சிக்ஸர் உட்பட ஐபிஎல்லில் தனது முதல் (124) சதத்தை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை எடுத்திருந்தது.
டெத் ஓவரில் மாஸ் காட்டும் தல தோனி…, சிக்ஸரில் எவரும் எட்டாத சாதனையை படைத்து அசத்தல்!!
சற்று கடினமான இந்த இலக்கை துரத்த களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். ஆனால், பின் வந்த இஷான் கிஷன் 28, கேமரூன் கிரீன் 44, சூர்யகுமார் யாதவ் 55 என நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் மூலம், 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், திலக் வர்மா 29*, டிம் டேவிட் 45* ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7 வது இடத்தை தக்கவைத்துள்ளது.