“ச்சே.., காவியாவ நினைச்சுகிட்ட என்கூட எப்படி.., அசிங்கமாவே இல்லையா?? ஆத்திரத்தில் ஜீவாவை கேவலமாக பேசிய பிரியா !!!!

0
"ச்சே.., காவியாவ நினைச்சுகிட்ட என்கூட எப்படி.., அசிங்கமாவே இல்லையா?? ஆத்திரத்தில் ஜீவாவை கேவலமாக பேசிய பிரியா !!!!

ஈரமான ரோஜாவே 2 சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோட்டில் ஜீவா, பிரியாவிடம் நான் உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்க வேணும். வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் பிரியா ஜீவாவிடம் நீ இதுவரை என்னிடம் பொய் மட்டும் தான் சொல்லிருக்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதற்கு ஜீவா கண்கலங்கியபடி, இதுவரைக்கும் நீங்க பார்த்த ஜீவா வேற. இனி நீங்க பார்க்க போற ஜீவாவே வேற என சொல்லி சமாதானப்படுத்துகிறார். ஆனா பிரியா இத்தன நாள் காவியாவ நினைச்சு தான் என் கூட வாழ்ந்த. எனக்கு ஒரு நாளாவது கணவரா நடந்துக்கிட்டியா. இனி ஏன் வாழ்க்கைல நீ வேணாம். என்ன விட்டுட்டு போ என்று கத்துகிறார். ஆனா பிரியா எவ்வளவு கேவலமாக பேசியும் ஜீவா கெஞ்சுகிறார். அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் பிரியா அங்கிருந்து சென்று விடுகிறார்.

இன்னொரு பக்கம் காவியா பார்த்திபன் இருவரும் கல்யாணத்தில் நடந்த பிரச்சனை நினைத்து வருத்தப்படுகின்றனர். அப்போது ஜீவா வீட்டிற்கு வர அருணாசலம், பார்வதி இருவரும் பிரியா வரவில்லையா என கேட்கின்றனர். ஜீவா நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்ல இருவரும் வருத்தப்படுகின்றனர். பின் ஜீவா தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நினைத்து கவலைப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here