பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, டெத் ஓவரில் சிக்ஸர்களை விளாசிய தோனி, ஐபிஎல் வரலாற்றில் எவரும் எட்டாத சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
தோனி:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் தனது 9 வது லீக் போட்டியில் மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்து அசத்தி இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், டெவோன் கான்வே 52 பந்தில் 16 பவுண்டரிகளை விளாசி 92* ரன்கள் குவித்தார். இவரை போல, நம்ம தல தோனி, டெத் ஓவரில் களமிறங்கி 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 4 பந்துக்கு 13 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் படைக்காத மாபெரும் சாதனையை தோனி படைத்துள்ளார்.
அதாவது, ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், 20 வது ஓவரில் மட்டும் 290 பந்துகளை எதிர்கொண்ட இவர், 59 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகள் உட்பட 709 ரன்களை குவித்துள்ளார். மேலும், டெத் ஓவரில், அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்திலும் இருக்கிறார். இதனை தொடர்ந்த, 15 முறை டெத் ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்களை விளாசி உள்ளார். MI யின் கெய்ரோன் பொல்லார்ட் 33 டெத் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.