இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் IPL தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. IPL போட்டிகளுக்காக அனைத்து அணி வீரர்களும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டனர். மேலும் இந்த ஆண்டு IPL தொடரை அவர்களது சொந்த மண்ணில் விளையாடலாம் என BCCI அறிவித்த நிலையில் CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு CSK அணி சென்னை திரும்புவதால் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட சந்தோஷத்தில் மிதந்து வருகின்றன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் CSK அணியின் கேப்டனாக உள்ள தோனி குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்த ஆண்டும் IPL உடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் எப்படியாவது CSK அணியை வெற்றி அடைய செய்து கோப்பையை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கான முழு நேரப் பயிற்சியில் தோனி களமிறங்கியுள்ளார். தோனி பயிற்சி எடுக்கும் அனைத்து வீடியோக்களையும் CSK அணி நிர்வாகம் இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
IND VS AUS.., தொடர்ந்து குறை கூறும் ஆஸ்திரேலிய வீரர்கள்.., இனிமேலாவது BCCI சரி செய்வார்களா??
இப்படி இருக்கையில் தோனி கடைசியாக மேற்கொண்ட பயிற்சியில் பந்துவீச்சாளர்கள் வீசும் அனைத்து பந்தையும் சிக்சர், பவுண்டரி என பறக்க விட்டு வருகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த வருட IPL சீசனில் தோனி CSK அணியை மட்டுமில்லாது தனது IPL கேரியரிலேயே பல சுவாரஸ்யங்களை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
View this post on Instagram