இந்திய அணியில் உள்ள ஆடுகளம் சரியில்லை என்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
IND VS AUS
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த வரவிருக்கும் 4 வது போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்து தொடர் யாருக்கு சொந்தமாகும் என்பது தெரியவரும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இரு அணி வீரர்களும், ரசிகர்களும் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியை காண அதிக ஆவலுடன் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது 3 வது போட்டி நடைபெற்ற இடமான இந்தூர் மைதானம் மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
WPL 2023.., முதல் ஆட்டத்திலே எதிரணியை கலங்கடித்த மும்பை இந்தியன்ஸ்.., 207 ரன்கள் குவித்து அசத்தல்!!!
மேலும் இந்த மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் தான் இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களையும், சாதனைகளையும் நிகழ்த்த முடிந்தது என தெரிவித்துள்ளார். இது தவிர இந்திய அணியில் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் BCCI சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.