IPL 2023 : சென்னையில் டிக்கெட் விற்பனை இந்த தேதியில் தொடக்கம்.., இதுல இவ்வளவு கட்டுப்பாடு இருக்கா!!!

0
IPL 2023 : சென்னையில் டிக்கெட் விற்பனை இந்த தேதியில் தொடக்கம்.., இதுல இவ்வளவு கட்டுப்பாடு இருக்கா!!!
IPL 2023 : சென்னையில் டிக்கெட் விற்பனை இந்த தேதியில் தொடக்கம்.., இதுல இவ்வளவு கட்டுப்பாடு இருக்கா!!!

சென்னையில் நடைபெறவுள்ள IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

IPL

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL போட்டி இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த குஷியில் உள்ளனர். இந்நிலையில் மற்ற மைதானங்களில் IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் சென்னையில் மட்டும் டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த டிக்கெட் விற்பனை குறைந்தபட்சமாக 1500 இல் இருந்து அதிகபட்சமாக 3000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3000 ரூபாய் காண டிக்கெட்டை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் 2000, 2500 ரூபாய் காண டிக்கெட்டை ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டரிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மைதான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதாவது மைதானத்துக்குள் ஹெல்மெட், லேப்டாப், பேக், குடை போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக், பீடி, குட்கா, சிகரெட், புகையிலை போன்ற பொருட்களும் கொண்டு வர தடை விதித்துள்ளனர். இதை தொடர்ந்து போட்டி தொடங்குவதற்கு இரண்டு நேரத்திற்கு முன்பே மைதானத்தில் கதவுகள் திறந்துவிடும். ஒருமுறை மைதானத்துக்குள் வந்து விட்டால் போட்டி முடிந்த பிறகு தான் வெளியே வர முடியும் என அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here