2023 IPL தொடருக்கான மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் பணி டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் அனைவரது எதிர்பார்ப்பும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது திரும்பியுள்ளது. ஏனென்றால் இந்த அணி கடந்த சீசனில் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்து கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் கூட்டத்தில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, டிம் டேவிட் ஆகிய வீரர்களை தக்க வைத்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுனா விருதுக்கு தமிழக வீரர் பெயர் பரிந்துரை…, இணையத்தில் கசிந்த தகவல்!!
அதே சமயம் விடுவிப்பு பட்டியலில் ஆகாஷ் மத்வால், அன்மோல்பிரீத் சிங், டைமல் மில்ஸ், முருகன் அஸ்வின், மயங்க் மார்கண்டே, சஞ்சய் யாதவ், ரமன்தீப் சிங், கீரன் பொல்லார்ட் ஆகிய வீரர்களை வேறு அணிக்கு மாற்ற உள்ளதாக கூறியுள்ளனர். எனவே அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெறுவார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.