பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிடம் மாட்டி கொண்டு கோபி படும் பாட்டை பார்க்கும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ராதிகாவின் பேச்சை கேட்டு கொண்டு பாக்கியாவிடம் கோபி ரேஷன் கார்டு எடுத்துட்டு வா என அதிகாரமாக சொல்கிறார். அதற்கு பாக்கிய நீங்க சொல்றத கேட்க நா உங்க பொண்டாட்டி கிடையாது என பதிலடி கொடுக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சீரியலில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது புது ட்விஸ்ட் ஒன்று வரவுள்ளது. அதாவது பாக்கியாவின் மருமகள் ஜெனி கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயத்தை கேட்டு குடும்பமே சந்தோசப்படுகிறது. இந்த விஷயத்தை வைத்து ராமமூர்த்தி கோபியை படு மோசமாக கலாய்க்கிறார்.
அசிம், மைனா இப்படி பட்டவர்களா?? பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் உண்மையை உடைத்த ஷெரினா!!
அதாவது கோபி ராதிகாவுடன் வெளியே வரும் போது நான் கொள்ளு தாத்தா ஆகிட்டேன் என கத்தி சொல்லுகிறார். இதுமட்டுமல்லாமல் பையனுக்கு குழந்தை பிறக்க போது, ஆனா தாத்தாவாகுற வயசுல கல்யாணம் தேவையா என கிண்டலடிக்கிறார்.
இது தவிர கோபியை தாத்தா தாத்தா என்று சொல்லி வெறுப்பேற்றுகிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா கோபியிடம் நான் ஒரு தாத்தாவை கல்யாணம் கட்டிகிட்டேன் என சண்டை போடுவாராம். இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கோபி அமைதியாக இருப்பாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.