பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 4 வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினா தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். வெளியே வந்த இவரிடம் அசீம், தனலட்சுமி, நந்தினி (மைனா) பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதற்கு இவர் அசீம் மிகவும் நல்லவர். அவருக்கு ஏதாவது தப்புனு தோணுச்சுனா உடனே கோபப்பட்டு சண்டை போடுவார். ஆனால் அடுத்த நிமிஷம் அதை மறந்துட்டு அனைவரிடமும் பிரெண்ட்லியாக பழகுவார். ஆனால் தனலட்சுமி அப்படி கிடையாது. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு சண்டை வந்தால் அதை வைத்து அழுது மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார் என ஷெரினா கூறியுள்ளார்.
நந்தினியை எடுத்து கொண்டால் அவருக்கும், அசீமுக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வாரத்துக்கு முன்னதாகவே ஏதோ சண்டை இருந்திருக்கிறது. இதனால் தான் அசீமை நந்தினி டார்கெட் பண்ணுவதாக ஷெரினா தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்த தகவல் தான் இப்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.