சாமியார் நித்யானந்தா மீது ஆள் கடத்தல், பாலியல் புகார்கள் கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் மீது இன்டெர்போல் (பன்னாட்டு காவலகம்) ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கைலாசா தீவு
சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுப்பிய விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் ஈகுவடார் நாட்டுக்கு தப்பிச் சென்று அங்கு தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அங்கு சொற்பொழிவு நடத்தி வருவதாகவும் சர்ச்சைக்குரிய தகவல் வெளியானது. அதனை ஈகுவடார் நாடு மறுத்தது. அவருக்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தது.
வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்
டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்
ப்ளூகார்னர் நோட்டீஸ்
குஜராத் போலீசார் கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்கள் தொடர்பாக நித்யானந்தாவை கண்டுபிடித்து தரும்படியும், இதற்காக அவருக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ் வழங்கும்படியும் சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலுக்கு கடிதம் எழுதினர்.
யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இதனை ஏற்று தற்போது இன்டெர்போல் புளூகார்னர் நோட்டீஸ் நித்யானந்தாவிற்கு எதிராக வழங்கியுள்ளது. ப்ளூகார்னர் நோட்டீஸ் என்பது குற்றவாளி இருக்கும் இடத்தை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வது கட்டாயமாகிறது என்பதைக் குறிக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |