நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் இன்றளவும் ஒரு சில பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் எக்கச்சக்கமான பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் SSC தேர்வாணையம் MTS குரூப் D போட்டித்தேர்வு மூலம் வாட்ச்மேன், பியூன், கார்டனர் உள்ளிட்ட பதவிகளில் 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஜனவரி 18 முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆதார் அட்டைதாரர்களே., தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த வாய்ப்ப மட்டும் தவறவிடாதீங்க!!!
இதில் 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பி.டெக். , எம்.டெக். , பி.பி.ஏ. , எம்.பி.ஏ. , எம்.ஏ. , எம்.எஸ்.சி. உள்ளிட்ட உயர் கல்விகளை படித்தவர்களாக இருக்கின்றனர். இதன்மூலம் நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் அவதியுறுவது தெளிவாக தெரிகிறது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.அதிலும் உத்திர பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் 19 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.