விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கண்ணன் தனது முழு தவறையும் உணர்ந்து அண்ணன்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார். ஐஸ்வர்யாவும் தான் செய்த தவறை உணர்ந்து விட்டார். இதற்கு மேலும் தனியாக இருக்க கூடாது என்று அண்ணன் வீட்டிற்கு வந்து விட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கதிர் அவர்களை உள்ளே சேர்த்து விட இது மூர்த்திக்கு சுத்தமாகவே தெரியாது. கடந்த வாரம் வெளியான ப்ரோமோவில் கண்ணன் வந்ததை அறிந்து மூர்த்தி கோவப்படுகிறார். இவனை யாரு தேவையே இல்லாமல் வீட்டுக்குள்ள வீட்டுல விட்டீங்க என்று கேட்டு கொந்தளிக்கிறார். கதிர் தான் வீட்டிற்கு அழைத்து வந்தது என்று தெரிந்ததும் அமைதியாகிறார்.
எப்படியும் கண்ணனை மூர்த்தி சேர்த்து கொள்ள தான் செய்வார். அதுமட்டுமின்றி நாள் போக போக மூர்த்தி மன்னித்தும் விடுகிறார். இப்பொழுது ஜீவா மட்டும் தான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜனார்த்தனன் செய்யும் அட்டகாசத்தால் கண்டிப்பாக ஜீவாவும் வீட்டை விட்டே வெளியேறி விடுவார். கண்டிப்பாக, மீண்டும் அண்ணன்களை தேடி வந்து விடுவார். அதன் பிறகு வீடு கட்டி குடியேறுவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கிளைமாக்ஸ்- ஆக இருக்கும்.