ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் வைத்து தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடினர். மேலும் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. தற்போது தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களை குவித்து தனது ஆட்டத்தை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்மித் தனது 27 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்தியா அணி சார்பில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை எடுத்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியா முதல் இன்னிங்ஸ்:
அதன் பிறகு இந்தியா அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவக்கியது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் களமிறங்கினர். இந்தியா அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மங் கில் களமிறங்கினர் இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை பொறுமையுடன் எதிர்கொண்டு வந்தனர். இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார். அருமையாக விளையாடி வந்த சுப்மங் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். 50 ரன்கள் எடுத்த நிலையில் கில் தனது ஆட்டத்தை இழந்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 2 விக்கெட்களை இழந்து 96 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் ரஹானே 5 மற்றும் புஜாரா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹெசில்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தற்போது இந்தியா அணி 242 ரன்கள் பின்தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.