இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை சிட்டி அணி, தனது சொந்த மண்ணில் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் வெற்றி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக்:
இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு (11) அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக இருமுறை போட்டி போட்டு கொண்டு வருகின்றன. இதில், ஒரு முறை தனது சொந்த மண்ணிலும், மறுமுறை எதிரணியின் மண்ணிலும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இந்த வகையில், பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை சிட்டி அணி தனது சொந்த மண்ணில் போட்டியிட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், மும்பை சிட்டி அணியின் ஜார்ஜ் பெரேரா தியாஸ் மற்றும் லாலெங்மாவியா ரால்டே 14 வது மற்றும் 32 வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து அசத்தினர். இதனால், மும்பை சிட்டி அணி 2-0 என்ற ஆட்டத்தின் முதல் பாதியில் முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடக்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை சிட்டி அணியே தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது.
இந்த 2வது பாதியில், 58 மற்றும் 74 வது நிமிடங்களில் மும்பை சிட்டி அணி வீரர்கள் மேலும் 2 கோல்கள் அடித்து அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதி வரை, பெங்களூரு அணி ஒரு கோலுக்காக முயற்சித்து மட்டுமே வந்தது. இதன் விளைவால், மும்பை சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் சேர்த்து மும்பை அணி 15 புள்ளிகளை பெற்று 11 அணிகள் கொள்ள புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை எட்டியது.