இந்திய ரயில்வே சுமார் 1.4 லட்சம் காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக நாளை முதல் தனது 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) மூலம் மூன்று கட்டங்களாக ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மெகா ஆட்சேர்ப்பு இயக்கம்:
ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆர்ஆர்பி சார்பாக மெகா ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் கட்ட தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை தொடங்கும். இதைத் தொடர்ந்து டிசம்பர் 28 முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை என்டிபிசி பிரிவுகளும், லெவல் -1 க்கான மூன்றாவது ஆட்சேர்ப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் இறுதி வரை நடைபெறும். மேலும் ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 2.44 கோடிக்கும் அதிகமான தேர்வர்கள் வரவுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி!!
கொரோனா நோய் பரவல் காரணமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சமூக விலகல், முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல், மேலும் ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்டுகளுக்கு மட்டுமே நடத்தப்படும் என ஆர்ஆர்பி தெரிவித்துள்ளது