அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி – அனைவர்க்கும் பரிசோதனை!!

0
Anna University
Anna University

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று:

சென்னை ஐஐடி நிறுவனத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடன் இருந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இறுதியாண்டு படிக்கும் 700 மாணவர்களுக்கு 3 நாளில் கொரோனா பரிசோதனையை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

anna university latest
anna university 

தமிழகத்தில் 10 மடங்காக உயர்ந்த ‘நிமோனியா பரவல்’!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐஐடி நிறுவனத்திற்க்கு கீழ் உள்ள 9 விடுதிகள் மற்றும் 1 விருந்தினர் மாளிகையை மூட அரசு உத்தரவிட்டனர். தற்போது அதேபோல் அண்ணா பல்கலைக்கழக விடுதியை மூடுவார்களா என மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here