இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி தனது முதல் விக்கெட்டை அசத்தலாக பதிவு செய்துள்ளார் தமிழக வீரர், நடராஜன். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரலியாவுக்கு எதிரான போட்டிகள்:
ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா மைதானத்தில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு நாள் போட்டியில் மோதுகின்றன. இன்று நடந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் முதலாவதாக நம் அணி வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மண் கில் ஆகியோர் விரைவாகவே அவுட் ஆகினர். இந்த போட்டியில் ஹர்டிக் பாண்ட்யா மட்டும் 92 ரன்கள் அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 302 ரன்களை எதிர் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கிற்காக தற்போது ஆஸ்திரேலியா அணி வெறித்தனமாக விளையாடி வருகின்றது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் வார்னர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விளக்கியுள்ளார். அவருக்கு பதிலாக கேப்டன் ஆரோன் ஃபின்சும், லபுஷேனும் ஓப்பனிங் செய்தனர்.
ஹர்திக் பாண்ட்யா விளாசல் – 50 ஓவர்களில் இந்திய அணி 302 ரன்கள் குவிப்பு!!
தொடர்ந்து 25 ஓவர்கள் வரை எந்த விக்கெட்டும் இழக்காமல் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாடி வந்தனர். கடந்த 25 ஓவர்களாக பும்ரா மற்றும் நடராஜன் பௌலிங் செய்தனர். தற்போது ஆறுதல் அளிக்கும் விதமாக நடராஜன் லபுஷேன் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக விளையாடும் நடராஜன் வீழ்த்தியுள்ள முதல் விக்கெட் இது தான். இதனை தொடர்ந்து அவர் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார். இந்திய வீரர் ஷாகுல் தாக்குர் இரெண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியா அணி தற்போது 22 ஓவர் முடிவில் 117 ரன்களுடன் 3 விக்கெட்டுகள் இழந்துள்ளது.