இனி 50% பேர் வீட்டில் தான் இருக்கனும் – ‘Work From Home’ படுத்தும்பாடு..!

0
work from home
work from home

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரிந்தன. பாதி ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிப்பதற்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

Work From Home

கொரோனா நோய் தோற்று ஏற்பட்டதில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலேயே வேலை பார்க்க வைத்துள்ளன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில அலுவலகங்கள் ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. எனினும், இன்னும் ஏராளமான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்து வருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

work from home
work from home

இந்நிலையில், கொரோனாவுக்கு பின்பும் பாதி ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் நீண்டகால அடிப்படையில் கொள்கைகளை மாற்றி வருகின்றன. இதன்படி, மாரிகோ நிறுவனம் தனது வழக்கமான பணிச்சூழலை மாற்றி 40 விழுக்காடு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிப்பதற்கு ஆலோசித்து வருகிறது.

ஊழியர்கள்

விளம்பர நிறுவனமான வண்டர்மேன் தாம்சன் தனது ஊழியர்களில் 50 விழுக்காட்டினரை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் அலுவலத்திலும், இரண்டு நாட்கள் வீட்டிலும் வேலை செய்வதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது.

கோவில்கள், மால்கள் திறக்கப்படாது – லாக் டவுன் தொடரும் மாநிலம்..!

work from home
work from home

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்டின் ஷ்வெங்க், “பாதி ஊழியர்களை வீட்டிலிருந்தும், பாதி ஊழியர்களை அலுவலகத்திலும் பணிபுரிய அனுமதிப்பதே இப்போது இயல்பாகிவிட்டது. இரண்டையும் கலந்த பணிச்சூழலே இப்போது அவசியம். இதனால் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளதும் வியப்பாக இருக்கிறது. வீட்டிலிருந்தே வேலைபார்ப்பது பணிக்கு ஏற்றதாகவும், வசதியாகவும் இருக்கிறது. இது ஒரு புத்திசாலித்தனமான திட்டம். இதனால் பயண நேரமும், வாகனப் புகை வெளியீடும் குறைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

work from home
work from home

கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தில் சுழற்சி முறையில் 33 விழுக்காடு ஊழியர்களை மட்டும் அலுவலகத்திற்கு வர அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேபிஎம்ஜி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் பார்ட்னர் உன்மேஷ் பவார், “ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இதற்கேற்ப நிறுவனத்தின் கொள்கைகளும் மாற்றப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தே வேலை செய்வதால் ஊழியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். நெஸ்லே இந்தியா நிறுவனமும் சில முக்கியமான ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here