தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் ஆனதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிப் பொதுத்தேர்வுகள்:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு முன்னரே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் ஜூன் 15ல் இருந்து தொடங்க உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்வை ஜூன் 15ல் நடத்த அனுமதிக்க முடியாது எனவும், ஜூலை 2வது வாரத்தில் நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். இது குறித்து முழு அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யக்கோரி ஜூன் 11ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிகளில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் கிரேடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.