இந்திய கடலோர காவல் படையில் இளைஞர்களுக்கான ஓர் அரிய வேலை வாய்ப்பு விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இதற்கான முழு விவரங்களை கீழே காண்போம்.
இந்திய கடலோர காவல்படை
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கடலோர காவல் படையில் உள்நாட்டு கிளை என்ற பணிக்கான 50 காலிப்பணியிட விபரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதற்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விண்ணப்பத்தார் கடைசி தேதிக்குள் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
கல்வித்தகுதி, வயது
இந்திய கடலோர கவலைப்படையில் விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களை பெற்றிக்க வேண்டும். எஸ்.சி , எஸ்,டி மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு 5 மதிப்பெண்கள் சலுகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
விண்ணப்பதாரரின் வயது 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க இளைஞருக்கான வேலை வாய்ப்பு.
தேர்வு முறை
உடற்தகுதியை பொருத்தும் தேர்வு செய்யப்படுவர். இளைஞர் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும், மார்பின் சுற்றளவு 5 செ.மீ இருக்க வேண்டும். இளைஞர் 20 சிட் அப்ஸ் மற்றும் 50 புஷ்அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிக்க வேண்டும்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் 7 நிமிடத்தில் 1.6 கிலோமீட்டர் ஓடும் திறன் பெற்றிக்க வேண்டும் என்று அறிவுத்துள்னர். உடற்தகுதி தேர்வு மட்டும் இல்லமல் எழுத்து தேர்வு அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம்
இந்திய கடலோர காவல்படையில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.21,700 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி 7.12.2020 ஆகும்.
அதற்குள் விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட்அவுட் செய்து வைத்திருக்க வேண்டும்.