2023 ஒருநாள் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இந்த இறுதி போட்டி நாளை (நவம்பர் 19) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. உலக கோப்பை போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் மோத இருப்பதால், இரு நாடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்., ராமேஸ்வர மீனவர்கள் இத்தனை பேர் கைது., திடுக்கிடும் தகவல்!!!
இந்த சூழலில் உலக கோப்பை இறுதிப் போட்டியை நேரில் பார்க்க ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ் இந்தியா வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் போட்டி துவங்கும் முன் விமான சாகசம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை இந்திய அரசு ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது