தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ராமேஸ்வர மீனவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருந்தனர். இதையடுத்து வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., உலக கோப்பையை கான ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!
இதனால் அண்மையில் இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 22 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்துள்ளனர். அதோடு இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.