இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவிருந்த கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது.
கிரிக்கெட் தொடர்:
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த மாத இறுதி மற்றும் ஜூலை மாத தொடக்கத்தில் 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தொடருக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் தற்போதைக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இது குறித்து விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால், இந்திய கிரிக்கெட் அணி இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை. மேலும் சர்வதேச போக்குவரத்து சேவை கொரோனா பாதிப்பு காரணமாக எப்போது தொடங்கும் என தெரியவில்லை.
டி20 ஆசிய கோப்பை போட்டி எப்பொழுது.?? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு..!
எனவே ஜூன் மற்றும் ஜூலை மாத தொடரில் இந்திய அணி பங்கேற்காது என இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இது நடைபெற வாய்ப்புள்ளது. இது குறித்து கூறிய இலங்கை கிரிக்கெட் வாரியம், ஆகஸ்ட் மாதம் இது நடைபெறலாம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளது.