சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பைக்கான இந்திய அணியை உத்தம் சிங் வழி நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தலைமையின் கீழ் இந்தியா கோப்பையை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஹாக்கி அணி:
சர்வதேச ஆடவர் இந்திய ஹாக்கி அணி சர்வதேச ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 28 ம் தேதி முதல் FIH புரோ லீக் தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய ஹாக்கி அணி சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை விளையாட தயாராகி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து, இந்த வருடம் அக்டோபர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை சுல்தான் கோப்பை நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில், இந்தியா, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கு பெற உள்ளன. இதில், இந்திய அணி முதல் போட்டியில் 22ம் தேதி மலேசியாவையும், அடுத்த நாள் தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள இருக்கிறது.
இதனை தொடர்ந்து, 25, 26 தேதிகளில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான இந்திய அணியை உத்தம்சிங் வழி நடத்த உள்ளார். இந்திய அணி இதற்கு முன் இந்த கோப்பையை இரு முறை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த முறையும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஜூனியர் ஹாக்கி அணி:
கோல்கீப்பர்கள்:
மோஹித் எச்.எஸ், அங்கித் மாலிக்
டிபெண்டர்ஸ்:
அமீர் அலி, ஷர்தானந்த் திவாரி, ரோஹித், அமந்தீப் லக்ரா, சிரில் லுகுன்
மிட்ஃபீல்டர்கள்:
விஷ்ணுகாந்த் சிங், ராஜீந்தர் சிங், அங்கித் பால், பூவண்ணா சிபி, அமந்தீப், ஜான்சன் பூர்த்தி
பார்வேர்ட்ஸ்:
உத்தம் சிங் (கேப்டன்), அங்கத் பீர் சிங், அரைஜீத் சிங் ஹண்டால், பாபி சிங் தாமி (துணை கேப்டன்), சுதீப் சிர்மகோ