இந்தியா vs இலங்கை அணிகள் மோதும் T20 தொடரின் 3வது மற்றும் இறுதி போட்டி சௌராஷ்ட்ரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் இன்று நடைபெற போட்டியில் வெற்றியை உறுதி செய்ய இரு அணி வீரர்களும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் தூரம் குறைவாக உள்ளதால் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்த ஆடுகளமாக இருக்கும். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலே ரன் குவிப்பில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளது. மேலும் இந்த மைதானம் மற்றும் தற்போது நிலவும் சூழ்நிலையம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 வருடங்களுக்கு முன் இதே நாளில் இந்தியா படைத்த மாபெரும் சாதனை…, என்ன தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மான் கில் மற்றும் நோ பால் மன்னன் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ருதுராஜ், வாஷிங்டன் சுந்தரை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த போட்டியில் எடுத்தது போல் ரிஸ்க் எடுக்காமல் இந்திய அணி இந்த ஆண்டுக்கான முதல் தொடரின் வெற்றியை தனது சொந்த மண்ணில் பதிவு செய்வார்களா என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.