ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி காலத்திலோ அல்லது பணி காலத்திலோ வேறு எந்த ஒரு நிறுவனத்திலோ பணிபுரிய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனம்:
தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் ஏராளமானோர் ஐடி நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படுகிறார்கள். ஏனென்றால் ஐ டி துறையில் அதிகமான வருமானம் வரும் என்று எண்ணி அந்த முடிவை தேர்ந்தெடுக்கின்றனர். ஐடி துறையில் சாதகங்கள் ஒருபக்கம் இருந்தால் மறுபக்கம் பாதங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் ஐ டி துறையில் தற்போது மூன்லைட்டிங் தான் பேசுபொருளாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐடி துறையில் பணிபுரியும் பணியாளர்கள் அவர்களது பயிற்சி காலத்திலோ அல்லது பணி காலத்திலோ வேறு எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரிய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் கம்பெனி மூன்லைட்டிங் என்ற பெயரில் புதிதாக வேலை சேர்க்கும் பணியாளர்கள் அப்பொய்ன்மெண்ட் ஆர்டரில் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விப்ரோ, டிசிஎஸ், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களும் இது போன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.