தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கான உதவிதொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புதிய திட்டம்:
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியை பிடித்து தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது திமுக அரசு. இந்த அரசு மகளிருக்காக பல வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதன் வரிசையில் அண்மையில் புதுமை பெண்கள் திட்டம் என்கிற பெயரில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்காக மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கான உதவி தொகை குறித்த தகவலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாந்திர நிதியுதவியாக ரூ.1,000 வழங்கப்படும் என திமுக பிரசாரத்தில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பல மாதங்களாக செயல்படுத்தப்படாமல் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இது பற்றி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து நிதி பிரச்சனைகளும் தீர்ந்தவுடன் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உதவித்தொகை வழங்கப்பட்டால் ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.