இறுதி போட்டிக்குள் நுழையுமா இந்தியா?? ஜப்பானுக்கு எதிராக களமிறங்கும் இளம் படை!!

0

சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய இளம் படை இன்று ஜப்பானுக்கு எதிராக பலப்பரீட்சை செய்ய உள்ளது.

இந்திய அணி:

சர்வதேச இந்திய ஆடவர் ஹாக்கி அணி சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பைக்கான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், இந்தியா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், உத்தம் சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில், மலேசியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில், இந்தியாவின் பார்வேர்ட் மற்றும் மிட்ஃபீல்டர்கள் அசத்தலால் 5-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றியுடன் இந்த கோப்பையை தொடங்கியது. இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் அதை நிலையாக வைத்துக் கொள்ளத் தவறியது.

இதனால், இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், 3 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் 2 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here