இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!!

0

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் மட்டும் 2வது அலை தொடங்கி உள்ளதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்தது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது நாடு முழுவதும் நவம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதமும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

corona test
corona test

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 43,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,09,787 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 492 பேர் உயிரிழந்த காரணத்தால் பலி எண்ணிக்கை 1,35,715 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் தகவலாக இதுவரை 87,18,517 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் உயிரிழப்பு விகிதம் குறைந்து, டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரித்து வருவது பொதுமக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மேலும் வரும் 28ம் தேதி கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் சீரம் நிறுவனத்தை பிரதமர் மோடி அவர்கள் நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மக்களுக்கு விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here