இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று முதல் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியா முழுவதும் 42,533 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கையும் 1,373 ஆக அதிகரித்து உள்ளது. ஆறுதல் அளிக்கும் தகவலாக 11,707 பேர் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 29,453 பேர் தற்போது மருத்துவமனைகளில் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், 548 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 290 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
மாநில வாரியாக பாதிப்பு எண்ணிக்கை:
- மஹாராஷ்டிரா – 12,974 பேர்
- குஜராத் – 5,428 பேர்
- டில்லி – 4,549 பேர்
- தமிழகம் – 3,203 பேர்
- ராஜஸ்தான் – 2,886 பேர்
- மத்திய பிரதேசம் – 2,846 பேர்
- உத்தர பிரதேசம் – 2,645 பேர்
- ஆந்திரா – 1,583 பேர்
- பஞ்சாப் – 1,102 பேர்
- தெலுங்கானா – 1,082 பேர்
- மேற்கு வங்கம் – 963 பேர்
- காஷ்மீர் – 701 பேர்
- கர்நாடகா – 614 பேர்
- பீஹார் – 503 பேர்
- கேரளா – 500 பேர்
- ஹரியானா – 442 பேர்
- ஒடிசா – 162 பேர்
- ஜார்க்கண்ட் – 115 பேர்
- சண்டிகர் – 94 பேர்
- உத்தரகாண்ட் – 60 பேர்
- சத்தீஸ்கர் – 57 பேர்
- அசாம் – 43 பேர்
- லடாக் – 41 பேர்
- ஹிமாச்சல பிரதேசம் – 40 பேர்
- அந்தமான் – 33 பேர்
- மேகாலயா- 12 பேர்
- புதுச்சேரி- 08 பேர்
- கோவா- 07 பேர்
- திரிபுரா- 04 பேர்
- மணிப்பூர் – 02 பேர்
- அருணாச்சல பிரதேசம் – 01 பேர்
- மிசோரம் – 01பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |