சுட்டெரிக்கும் கத்தரி வெயில் – தொடங்கியது அக்னி நட்சத்திரம்..!

0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வரும் மே 28ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

பருவமழை எப்போது..?

வருடந்தோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடைகாலம் ஆகும். கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில், கேரளா, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா என, ஜம்மு – காஷ்மீர் வரை பரவுகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.

கத்தரி வெயில்:

மற்ற கோடை நாட்களை விட அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் அடிப்படையான ஒன்றாகும். அந்த வகையில் இன்று (மே 4) அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28 உடன் முடிவடைகிறது. இதனால் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டு உள்ளது. கடலோரம் இல்லாத சில உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டெரிக்கலாம். எனவே, காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here