இந்தியாவில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 67 பேர் கொரோனா தாக்கத்தால் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,074 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். 8,325 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,651 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குகொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மேலும் இதுவரை 432 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக பாதிப்பு விபரம்:

  1. மஹாராஷ்டிரா – 9,915 பேர்
  2. குஜராத் – 4082 பேர்
  3. டில்லி – 3,439 பேர்
  4. மத்தியப்பிரதேசம் – 2,561 பேர்
  5. ராஜஸ்தான் – 2,438 பேர்
  6. தமிழகம் – 2,162 பேர்
  7. உத்தர பிரதேசம் – 2,134 பேர்
  8. ஆந்திரா – 1,332 பேர்
  9. தெலுங்கானா – 1,012 பேர்
  10. மேற்கு வங்கம் – 758 பேர்
  11. காஷ்மீர் – 581 பேர்
  12. கர்நாடகா – 535 பேர்
  13. கேரளா – 495 பேர்
  14. பீஹார் – 392 பேர்
  15. பஞ்சாப் – 357 பேர்
  16. ஹரியானா – 310 பேர்
  17. ஒடிசா – 125 பேர்
  18. ஜார்க்கண்ட் – 107 பேர்
  19. சண்டிகர் – 56 பேர்
  20. உத்தரகாண்ட் – 55 பேர்
  21. ஹிமாச்சல பிரதேசம் – 40 பேர்
  22. அசாம் – 38 பேர்
  23. சத்தீஸ்கர் – 38 பேர்
  24. அந்தமான் – 33 பேர்
  25. லடாக் – 22 பேர்
  26. மேகாலயா- 12 பேர்
  27. புதுச்சேரி- 09 பேர்
  28. கோவா- 07 பேர்
  29. திரிபுரா- 02 பேர்
  30. மணிப்பூர் – 02 பேர்
  31. அருணாச்சல பிரதேசம் – 01 பேர்
  32. மிசோரம் – 01 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here