இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – பலி எண்ணிக்கை புதிய உச்சம்!!

0

இந்தியாவில் கடந்த 15 நாட்களாக தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 4000 ஆயிரத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேர நிலவரத்தில் புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரதாண்டவத்தினால் தற்போது அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் இருந்து வருகிறது. தற்போது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,22,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,67,52,447 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 4,454 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,03,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவில் இருந்து 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,37,28,011 ஆக அதிகரித்துள்ளது.

வேற லெவெலில் தெறிக்கவிட்ட தளபதியின் ‘தெறி’ – ஐந்தாண்டுகள் கடந்த சாதனை!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது மருத்துவமனையில் கொரோனாவிற்காக 27,20,716 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 19,28,127 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் மொத்தமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,05,36,064 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here