கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே சேவை நிறுத்தம்:
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், மே 26ம் தேதியன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கும் என்று நம்பப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
யாஸ் சூறாவளி காரணமாக மே 24 முதல் மே 29 வரை 25 ரயில்களை ரத்து செய்துள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 29ம் தேதிக்கு பின்னர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.