இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் விளையாடி வந்தது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது மற்றும் மூன்றாவது போட்டியை இந்தியா வென்று அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் நடைபெற்றது. இப்போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்தியா அணி 307 ரன்களும் எடுத்திருந்தனர்.
நடிகர் சித்தார்த்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
இந்நிலையில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், 192 ரன்களை இலக்காக கொண்டு தனது 2வது இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி , 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றும் அசத்தியுள்ளது.