ATM பயனாளர்களே எச்சரிக்கை., பணம் எடுப்பதில் இவ்ளோ பிரச்சனை? கண்டிப்பா இத பாலோ பண்ணுங்க!!!

0
ATM பயனாளர்களே எச்சரிக்கை., பணம் எடுப்பதில் இவ்ளோ பிரச்சனை? கண்டிப்பா இத பாலோ பண்ணுங்க!!!

இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால், பலரும் பணத்தை இழந்து கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஏடிஎம் கார்டு மூலம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்து வங்கி கிளைக்கு அலைந்த வண்ணம் உள்ளனர். எனவே இதுபோன்ற மோசடி செயல்களில் சிக்காமல் இருக்க, கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி,

வங்கி அருகிலோ அல்லது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலோ உள்ள ஏடிஎம்மை பயன்படுத்தினால் நல்லது.

இயந்திரத்தில் கார்டை பயன்படுத்துவதற்கு முன் கார்டு ரீடர் அல்லது கீபேடில், வேறு சாதனம் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

IND vs ENG 4th Test: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…, தொடரை வென்று அசத்தல்!!

அதேபோல் பின்னால் இருக்கும் நபரை சற்று தூரமாக இருக்கும் படி கூற வேண்டும். அல்லது பின் நம்பர் உள்ளிடும் போது கையை மறைத்த வண்ணம் பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை இயந்திரத்தை பயன்படுத்த தெரியவில்லை என்றால், ஏடிஎம் செக்யூரிட்டியிடம் உதவி கேட்பது சாலச்சிறந்தது.

பரிவர்த்தனை முடிந்த பிறகு, பெறப்பட்ட ரசீதை கிழித்து குப்பையில் போடலாம். அதேபோல் பணத்தை திறந்தவெளியில் எண்ணுவது கூடாது.

ஏடிஎம் கார்டு மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்து கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் SMS அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் தகவல்களை, தவறாமல் மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஏதேனும் முறைகேடு அல்லது போலி பரிவர்த்தனை இருந்தால், உடனடியாக வங்கிக்கு தெரிவித்து, கார்டை பிளாக் செய்ய வேண்டும்.

கார்டில் பின் நம்பரை எழுதி வைக்கக் கூடாது. அடிக்கடி பின் நம்பரை நினைவில் வைத்துக் கொள்ளும்படி மாற்றிக்கொண்டே இருக்கலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here