இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியை அசாமில் உள்ள பர்சபரா மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலில் களமிறங்கினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்கள், முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்து நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில், சுப்மன் கில் (70), ரோஹித் சர்மா (83), ஸ்ரேயாஸ் ஐயர் (28), கே எல் ராகுல் (39) என சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில், இலங்கையின் பந்து வீச்சுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய விராட் கோலி 87 பந்தில் 12 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 113 ரன்கள் எடுத்து சர்வதேச அளவில் தனது 73 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஒருநாள் தொடரில் உயர்ந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா…, இலங்கை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்!!
மேலும், ஒருநாள் தொடரில் மட்டும் 45 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில், விராட் கோலி (113), ஹர்திக் பாண்டியா (14), அக்சர் படேல் (9) ரன்களில் வெளியேற, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 373 ரன்கள் என இமாலய இலக்கை இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில், முகமது ஷமி (4*) மற்றும் முகமது சிராஜ் (7*) இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.