“பிட்ச் எப்படி இருந்தாலும் அதை சமாளித்து தான் விளையாடனும்”…, ஹர்திக் பாண்டியா கருத்து சூர்யகுமார் பதிலடி!!

0
"பிட்ச் எப்படி இருந்தாலும் அதை சமாளித்து தான் விளையாடனும்"..., ஹர்திக் பாண்டியா கருத்து சூர்யகுமார் பதிலடி!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த 2 போட்டிகளில், பிட்சுகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டி உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிட்ச்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று உள்ளனர். இந்த தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 100 ரன்களை துரத்தினாலும், அதனை அடைய கடுமையாக போராடி இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு காரணமாக ஹர்திக் பாண்டியா, டி20 போட்டிக்கு ஏற்ற பிட்ச் இது கிடையாது. இங்கு எதிர்பாராத வகையில் அதிக பவுன்ஸ்கள் உள்ளன. கடைசி நேரத்தில் பிட்ச் தயார் செய்தால் இப்படி தான் வெற்றிக்கு போராட வேண்டி இருக்கும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், நியூசிலாந்து அணியின் கேப்டனும் பிட்ச் சரியில்லை என்று தான் தெரிவித்திருந்தார்.

IND vs AUS Test: முன்னணி வீரரை கழற்றி விட்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி!!

இவர்கள் ஒரு புறம், இப்படி கூற, இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ள சூர்யகுமார், பிட்ச் எப்படி பட்டதாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனை சமாளித்து விளையாடுவது குறித்து தான் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில், இன்று போட்டி நடைபெற இருக்கும் மைதானம் எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த போட்டியில், பிட்ச் தயார் செய்த வடிவமைப்பாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here